பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுக்கு பதில் இனி இவரா?? கதறும் ரசிகர்கள்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் ரசிகர்கள் யாருக்கும் இவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமலே உள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

விஜய் டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாவர் சித்ரா. ஆரம்ப காலத்தில் இருந்தே கஷ்டப்பட்டு இந்த அளவிற்கு புகழ் அடைந்த சித்ரா இப்பொழுது இப்படி இறந்ததை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது ரசிகர்கள் பலரும் கதறி வருகின்றனர். ஏனெனில் சில காலமாக சித்ராவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமடைந்து கொண்டே தான் இருந்தார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சித்ராவை பிடிக்காத ஆளே கிடையாது என்றே சொல்லலாம். இப்படி இருக்க இவரின் மறைவு பலரையும் மனதளவில் பாதித்துள்ளது. ஒரு வீர மங்கையாகவே சித்ராவை பார்த்த நமக்கு அவரின் சோகமான முகம் யாருக்குமே தெரியாமலே போய்விட்டது.

‘சித்து அக்கா ஏன் இப்படி பண்ணீங்க’ என்று இதுவரையிலும் பல அழுகுரலை கேட்டு தான் வருகிறோம். மேலும் சித்ராவின் பிரேத பரிசோதனையில் வேறு அவர் தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என்ற உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் போலீசாரும் அவரது தற்கொலைக்கு யார் காரணம் என்ற ரீதியில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சித்ரா ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவை தவிர வேறு யாரையும் வைத்து பார்க்க என்று புலம்பியும் வருகின்றனர். இந்நிலையில் அந்த சீரியலில் சித்ராவின் தோழியான சரண்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால் சிலர் சித்ராவிடம் கடைசியாக இருந்தது சரண்யா தான். அவர் இந்த சீரியலில் நடிக்கலாம் என்றும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் சிலர் சித்ராவை இந்த சீரியலில் கொன்று விடுங்கள். வேறு ஒருவரை சித்ரா கதாபாத்திரத்தில் எங்களால் பார்க்க முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here