தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் பொங்கல் தினத்தன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம்
தென்னிந்திய திரையுலகில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் தளபதி விஜய். ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் மக்களின் மனதில் தளபதியாகும் அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆரம்ப காலத்தில் திரையில் பட்ட அவமானங்களை வைத்து தன்னை தானே செதுக்கிக் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவருக்கென தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்கள் உள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுநாள் வரையிலும் வயதே தெரியாமல் இளம் நடிகராகவே காட்சியளிக்கிறார் விஜய். விஜய்யின் படம் என்றாலே அது திருவிழா தான். அதுவும் தற்போது மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என அவரது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். மார்ச் மாதத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.
ஜூன் மாதத்தில் இந்த படம் வெளியிடலாம் என்று இருந்த நிலையில் திடீரென போடப்பட்ட லாக்டவுனால் திரையரங்குகள் யாவும் மூடப்பட்டன. இதனால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போ மாஸ்டர் படம் எப்பொழுது வெளியாகும் என்ற கேள்வியே பலருக்கும் எழுந்தது. தீபாவளியில் மாஸ்டர் வெளியிட இருப்பதாக சொல்லப்பட்டது.
சக்ரா படத்தை OTT இல் வெளியிட தடை – விஷாலுக்கு வக்கீல் நோட்டீஸ்!!
ஆனால் அப்பொழுதும் வெளியாகவில்லை. அதன் பிறகு இப்பொழுது மாஸ்டர் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜனவரி 13 பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுவும் சென்சார் அதிகாரிகளுக்கு தணிக்கைக்கு அனுப்பப்பட்டதில் U/A சான்றிதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலும் மக்கள் மத்தியில் பிரபலமானது. நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். மேலும் இதில் சாந்தனு, 96 படத்தில் திரிஷாவின் குழந்தை பருவ பெண்ணாக நடித்த கௌரியும் நடித்துள்ளனர். அதையும் தாண்டி விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடித்திருப்பதே எதிர்பார்ப்பை கூடியுள்ளது. கடந்த மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. மேலும் சமூக வலைத்தளங்களில் இந்த படத்தின் கதை கூட சில தினங்களுக்கு முன்பு லீக்கானது குறிப்பிடத்தக்கது.