நடிகர் விஜய்யின் தாயார் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் தளபதி விஜய். பல வருடங்களுக்கு பிறகு குடும்ப கதையான வாரிசு படத்தில் நடித்தார். இப்படத்தை சிலர் சீரியல் என்று கலாய்த்த போதிலும், வசூலில் பதிலடி கொடுத்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர் தில் ராஜு சொன்னது போல் படத்தில் எல்லாமே இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படம் வெளியாவதற்கு முன்பு விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இன்றைய தினம் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் புகழ்பெற்ற கோவிலுக்கு ஷோபா சந்திரசேகர் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடடே.., நம்ம ஜோதிகாவா இது?? 10 வயசு குறைஞ்சு ஆள் அடையாமல் தெரியாம மாறிட்டாங்களே!!
அதாவது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விஜய்க்கும் சந்திரசேகருக்கு சமீப காலமாக கருத்து வேறுபாடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அவர்கள் மீண்டும் பேச வேண்டும் என்பதற்காக தான் சோபா கோவில் குலமாக திரிகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.