தமிழக பள்ளி கல்வித்துறை மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று திருத்தணி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளியில் சில முகம் தெரியாத மர்ம நபர்கள் பள்ளியின் கதவுகளில் மனித மலத்தை பூசியுள்ளனர். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தியுள்ளனர். இதை பார்த்த பள்ளி மாணவர்கள் நேற்று தங்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி இருக்கையில் இப்போது இந்த சம்பவத்தை கண்டித்து நடிகர் தாடி பாலாஜி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் “நீங்கெல்லாம் என்ன ஜென்மம். இப்படி செய்ய உங்களுக்கு அறிவே இல்லையா?? இப்படி பள்ளி கதவுகளில் மனித மலத்தை பூசுவது அருவருக்கத்தக்க செயல். இதே பள்ளியில் உங்கள் குழந்தைகள் படித்தால் என்ன செய்வீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தக்க தண்டனை வழங்க வேண்டும்” தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
View this post on Instagram