இந்திய முழுவதும் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு PM கிசான் திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை என மூன்று தவணையாக ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தற்போது விவசாயிகள் 14 வது தவணையை எதிர்நோக்கி உள்ள நிலையில், முக்கிய அப்டேட் ஒன்றை திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, இந்த PM கிசான் திட்டத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்டவைகளை இணைப்பத்தால் மட்டுமே 14 வது தவணையை விவசாயிகள் பெற முடியும் என தெரிவித்துள்ளார். இதன்படி, 11 ஆயிரத்து 916 விவசாயிகளின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடனும், 19 ஆயிரத்து 337 பேர் ஆதாருடன் செல்போன் எண்ணையும், 3 ஆயிரத்து 810 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமலும் உள்ளனர். இவர்கள் அனைவரும், வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் இத்திட்டத்துடன் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே 14வது தவணையை விவசாயிகள் பெற முடியும் என திட்டவட்டமாக வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு அரசின் மாஸ் அறிவிப்பு., உடனே Appointment ஆர்டர் வாங்கிக்கங்க!!!