இந்த மாவட்ட சிறையில் இனி இது தான் நடைமுறை.., கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்!!!

0
இந்த மாவட்ட சிறையில் இனி இது தான் நடைமுறை.., கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்!!!
இந்த மாவட்ட சிறையில் இனி இது தான் நடைமுறை.., கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்!!!

தமிழக காவல்துறை அதிகாரிகளின் அதிக பணிச்சுமையை கருத்தில் கொண்டு தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் இப்போது சேலம் மாவட்ட மத்திய சிறைச்சாலையில் பணிபுரியும் காவலர்களுக்கு ரோந்து பணிக்காக மூன்று இ-சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-சைக்கிள் சேவையை கோவை சரக சிறைத்துறை டிஐஜி தொடங்கி வைத்தார். அதன்படி காவலர்களுக்கு வழங்கப்பட்ட இந்த மூன்று இ-சைக்கிள்களில் ஒன்றை சிறைத்துறை ஜெயிலர் பயன்படுத்துவார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மற்றொன்றை மருத்துவ ஆண் செவிலி உதவியாளர் பயன்படுத்துவார். கடைசியாக உள்ள சைக்கிளை முதல் தலைமை காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது சேலம் மாவட்டத்தில் மட்டும் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளில் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விவசாயிகளே…, PM கிசான் ஊக்கத்தொகைக்கு கெடு விதிப்பு…, இதே செய்யலேன்னா உங்களுக்கு கிடைக்காது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here