ஜெய் பீம் பட நடிகர் மணிகண்டன் நடிப்பில் நேற்று வெளியான “குட்நைட்” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் விஜய் சேதுபதி குறித்து பேசியது வைரலாக பரவி வருகிறது.
குட்நைட் திரைப்படம்:
தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட திரைப்படம் என்றால் அது சூர்யா நடித்த ஜெய் பீம் தான். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன். தற்போது இவர் ஹீரோவாக நடித்த குட்நைட் திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இவர் நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் கூறியதாவது, அண்மையில் நான் ஒரு பெரிய சிக்கலில் இருந்தேன். அப்போது விஜய் சேதுபதி அண்ணா திடீரென என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்பொழுது அவர், தம்பி மணி நான் இப்பொழுது மும்பையில் இருக்கிறேன்.
ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமா அந்த பழக்கத்துல கெட்டுட்டாரு.., உண்மையை உடைத்த பயில்வான்!!
நீ ஏதோ சோகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது, அதனால் தான் அழைத்தேன் என்று கூறினார். அப்போது தான் என்னுடைய கஷ்டத்தை கூறினேன். அதற்கு அவர் எந்த பிரச்சனை வந்தாலும் அது இரண்டு நாட்களில் சரியா என்று எனக்கு அறிவுரை கூறினார். இப்போது வரை அவர் எது சொல்லியும் நான் கேட்காமல் இருந்ததில்லை” என்று மணிகண்டன் கூறினார்.