இந்தியாவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில், கொண்டு வரப்பட்டது தான் மெட்ரோ ரயில் சேவை திட்டம். இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்து வருவதால், மெட்ரோ ரயில் சேவையை விரிவு படுத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும், ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் பாதைகளில் சில பராமரிப்பு பணிகளையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில், தற்போது கொல்கத்தாவில் மகாநாயக் உத்தம் குமார் முதல் கவி சுபாஷ் பகுதி வரை உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், இன்றும் நாளையும் (மே 13, 14) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆதார் அட்டை குறித்து வெளிவந்த முக்கிய தகவல்.., மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
இதனால், மே 13ம் தேதி தக்ஷினேஷ்வர்-டம்டம் மற்றும் மஹாநாயக் உத்தம் குமார் இடையே வழக்கம் போல ரயில்கள் இயங்கும். ஆனால், மகாநாயக்கர் உத்தம் குமார்-கவி சுபாஷ் நிலையத்தில் மட்டும் மெட்ரோ சேவை இருக்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மே 14ம் தேதியும் காலை 9 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ சேவைகள் மகாநாயக்கர் உத்தம் குமார்-கவி சுபாஷ் பகுதியில் இருக்காது எனவும் அறிவித்துள்ளது. இதே நேரத்தில், தக்ஷினேஷ்வர் – கவி சுபாஷ் பகுதியில் சாதாரண ரயில் சேவை இயங்கும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.