நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல் – டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கு!!

0

டெல்லி விவசாயிகளின் போராட்ட வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை மேலும் 7 நாள் போலீஸ் காவலின் கீழ் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 நாள் போலீஸ் காவல்

கடந்த 80 நாட்களாக டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் டெல்லி செங்கோட்டை போராட்டத்துடன் தொடர்புள்ளதாக கூறி நடிகர் தீப் சித்துவின் மேல் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. அதனால் சம்பவம் நடந்த 14 நாட்களுக்கு பிறகு நடிகர் தீப் சித்து டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ – தளபதி 66 அப்டேட்!!

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தீப் சித்துவை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார் சம்பவம் நடந்தது குறித்து நடித்துக் காட்ட கூறினார்கள். போலீஸ் காவல் இன்றுடன் முடிகின்ற நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் தீப் சித்துவை காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் தரும்படி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தீப் சித்துவை மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here