நடிகர் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஏகே 62:
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் ரசிகரிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அவரின் அடுத்த படத்தின் அப்டேட்காக மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். ஆனால் இது குறித்த எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் அஜித்தின் தந்தை உயிரிழந்த சம்பவம் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தால் படத்தோட அப்டேட் வருவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் என திகைத்து நின்ற ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
விவகாரத்திற்கு பிறகு டேட்டிங்கா.., சம்முவே வெளியிட்ட அதிரடி பதிவு.., வாயடைச்சு போன ரசிகர்கள்!!
அதாவது ஏகே 62 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழ் குமரன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஏகே 62 படத்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அடுத்த மாதம் கண்டிப்பாக அப்டேட் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் சந்தோசத்தில் திக்குமுக்காடி போய் உள்ளனர்.