ரேஷன் கடையில் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம்., சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!!

0
ரேஷன் கடையில் மீண்டும் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம்., சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!!
ரேஷன் கடையில் மீண்டும் ஊழியர்களுக்கான நிலுவை ஊதியம்., சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் நுகர்வோர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக தெரிய வந்தது. அன்று முதல் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் நடைமுறை செயல்படுத்தப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் ரேஷன் கடை மூடப்பட்டு ஊழியர்களுக்கு 55 மாதங்களாக ஊதியமும் வழங்க வில்லை. எனவே ரேஷன் கடையை மீண்டும் திறக்கவும், நிலுவை ஊதியம் வழங்கவும் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில நிதிநிலை அறிக்கையில் முதல்வர் ரங்கசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் ரேஷன் கடை திறக்கப்பட்டு மானிய விலையில் உணவுப் பொருட்களுடன் சிறு தானியங்களும் வழங்கப்படும்.

ஐபிஎல்லில் மீண்டும் புது கேப்டன்…, ஸ்ரேயாஸ் ஐயருக்கு தகுந்த வீரர் இவர் தான்!!

அதேபோல் ரேஷன் கடை ஊழியர்களின் நெடுங்கால நிலுவை ஊதியத்திற்கு பதிலாக 5 மாத ஊதியம் மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here