தென் இந்தியாவில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை காலத்தின் ஆரம்ப நிலையில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தில் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு ஆறுதலாக அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியை தருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து தமிழகத்தில் இன்னும் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரை தப்பட்டை கிழிய போகுது.., AK 62 படத்தை குறித்து புதிய தகவலை வெளியிட்ட படக்குழு!!!
மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, சேலம், நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதனால் இன்று மதியம் வெயிலில் வாடி இருந்த மக்களுக்கு வரமாக மழை பெய்ய உள்ளதால் இப்பகுதியினர் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.