சீனாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஆய்வு செய்ததில் A ரத்தவகை கொண்டவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் சீனா ஆய்வு..!
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை சுமார் 2500 பேரை ஆய்வு செய்துள்ளனர். அதில் அவர்களின் உணவு பழக்கம், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தய நோய் தாக்குதல்கள் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
A ரத்தவகை கொண்டவர்களை தாக்கும் கொரோனா..!
இந்நிலையில் ஆய்வு செய்ததில் 65 சதவீதம் பேர் A வகை ரத்த மாதிரிகளை கொண்டவர்கள். அதாவது ‘A ’ பாசிட்டிவ், ‘A ’ நெகட்டிவ், ‘AB’ பாசிட் டிவ், ‘AB’ நெகட்டிவ் ஆகிய ரத்த மாதிரிகளை கொண்டவர்களைத் தான் இந்த வைரஸ் எளிதாக தாக்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் O ரத்த வகை கொண்டவர்களை தாக்காது என்றெல்லாம் இல்லை. ‘O’ பாசிட்டிவ், ‘OB’ பாசிட்டிவ், ‘OB’ நெகட்டிவ் மற்றும் ‘O’ நெகட்டிவ் வகை ரத்தம் கொண்டவர்களை குறைவாக தாக்கும் என தெரிவித்துள்ளனர்.எனவே A வகை ரத்தம் கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |