விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியா இன்னும் வீட்டிற்கு வராததை அடுத்து அனைவரும் தேடி செல்கின்றனர். இதனால் வீடே பதட்ட நிலைமை ஆகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் அனைவரும் இனியாவிற்காக காத்துக்கொண்டுள்ளனர். மணி 6 ஆகியும் இனியா இன்னும் வீட்டிற்கு வராததை நினைத்து அனைவரும் பதட்டமடைகின்றனர். கோபியின் அப்பாவிற்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பாக்கியா இனியாவின் தோழி அனைவருக்கும் கால் செய்து விசாரிக்கிறார். இன்னைக்கு எந்த ஸ்பெஷல் கிளாஸ் இல்லை என்றே கூறுகின்றனர். இதனால் குடும்பத்திற்கே இடி விழுந்தது போல ஆகிறது.
அடுத்து எழிலும் வீட்டிற்கு வர அவரும் தெரிந்த இடம் முழுக்க தேடுகிறார். கடைசியில் ஸ்கூலில் சென்று விசாரிக்க ஸ்பெஷல் கிளாஸ் இதுவரையிலும் நடக்கவில்லை என்று கூறுகின்றனர்.
கடைசியில் வீட்டிற்கு வந்து சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். ஸ்கூல் டிரைவருக்கு கால் செய்கின்றனர். அவரும் 4 நாட்களாக இனியா பஸ்ஸில் வரவில்லை என்று கூறுகிறார். வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
கோபி வந்ததும் அவரின் காரில் இனியாவின் தோழி வீட்டிற்கு செல்கின்றனர். இனியா எங்கு சென்றிப்பார் என்று அவருக்கும் தெரியவில்லை. ஆனால் ஸ்கூலில் நடந்தவற்றை மறைத்து அவர் பரீட்சை எழுதாததால் ஹெட் மாஸ்டர் திட்டியதாக மட்டுமே சொல்கிறார்.
பூவே உனக்காக சீரியல் பூவரசி பற்றி தெரியாத மர்மங்கள் – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!
அதனால் தான் மனமுடைந்து இப்படி சென்றிருக்கிறார் என்று குடும்பத்தினர் நினைக்கின்றனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இனியாவை பற்றி தவறாக பேச ஆரம்பிக்கின்றனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.