திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கு தீர்வு கிடைக்கும் – கனிமொழி வாக்குறுதி!!

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தற்போது திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையிலும் மற்றும் மக்களுக்கு தேவைப்படும் விஷயங்களையும் திட்டங்களாக அறிவித்து வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது பிரச்சார வேளைகளில் தீவிரமாக இருந்து வருவதால் தமிழகத்தில் தேர்தல் களமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தேர்தலை கொரோனா தொற்று இன்றி பாதுகாப்பாக நடத்துவதற்கு தேர்தல் அதிகாரிகளும் மிக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி மக்களுக்கு ஓர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அது என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கும் வகையில் பொள்ளாச்சியில் பாலியல் குற்றம் நடைபெற்றது. அதுபோல் தமிழகத்தில் கடந்த சில காலங்களில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது.

ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

இதற்கு அரசு என்னதான் சட்டங்களை கொண்டு வந்தாலும் அது தொடர்ந்து நடந்து தான் வருகிறது. தற்போது இதுகுறித்து பேசிய கனிமொழி திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்டாய முறையில் பொள்ளாச்சி வழக்கிற்கு தீர்வு கிடைக்கும். பொள்ளாச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான 250 பெண்கள் புகார் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தக்க முறையில் தீர்வு வழங்கி தரப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here