ஏப்ரல் 3 லிருந்து பைக் பேரணி நடத்த தடை – தேர்தல் அதிகாரி அதிரடி!!

0

தமிழகத்தில் தேர்தலுக்காக பைக் பேரணி நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது பைக் பேரணி மூலம் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தையும் மிக சிறப்பாக செய்து வருகின்றனர். மக்களிடம் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தோசை ஊத்தியும், துணி துவைத்தும், டீ ஆத்தி கொடுத்ததும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதேபோல் பிரச்சாரத்திற்கு பைக் பேரணியும் நடத்தி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக கட்சியின் கொடியை பைக்கில் பறக்கவிட்டு பிரச்சாரம் நடக்கும் பகுதிக்கு சென்று வருகின்றனர். தற்போது இதுகுறித்து ஓர் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுஎன்னவென்றால் அரசியல் கட்சிகள் பைக் பேரணி மூலம் வாக்காளர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றுள்ளது.

ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

தற்போது இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சாகு ஓர் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி தேர்தல் நடைபெறும் அன்றும் மற்றும் அதற்கு மூன்று நாள் முன்பும் பைக் பேரணி நடத்த கூடாது என்று தேர்தல் அதிகாரி அதிரடியாக அறிவித்தார். இந்த சட்டம் தமிழகம் முழுவதுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here