Wednesday, May 15, 2024

நீல நிற உடையில் இடுப்பழகை காட்டிய சமந்தா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

Must Read

ரசிகர்களின் கனவு கன்னியான சமந்தா தற்போது நீல வண்ணத்தில் டிரஸ் அணிந்து தேவதை போல் உள்ள போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை சரமாரியாக வர்ணித்து வருகின்றனர்.

“என்றும் கனவு கன்னி”:

தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகையர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது. அவர்களுக்கு கொடுக்கப்படும் சின்ன இடைவெளியில் அவர்கள் தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர் அதிகமாக அனைவராலும் பார்க்கப்படுவார். இப்படியாக நடிகையர் சூழல் இருக்கையில் தனக்கு கிடைத்த சிறிய வேடத்தில் அபாரமாக நடித்து அனைவர் மத்தியிலும் பெயர் பெற்றவர் தான், சமந்தா.

“விண்ணை தாண்டி வருவாயோ” படத்தில் மிக சிறிய வேடத்தில் நடித்து அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகையாகவே நடித்தார். தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்பினை கெட்டியாக பிடித்து தற்போது சினிமா உலகின் முன்னணி நடிகையாக உள்ளார். அந்த படத்திற்கு பின்பு வரிசையாக தமிழ் திரையுலகின் முன்னி நடிகர்களான விஜய், சூர்யா போன்றோருடன் நடித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழில் எப்படியோ அதே போல் தான் தெலுங்கு உலகிலும் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். வெறும் ஹீரோக்களுடன் டூயட் படும் நடிகையாக மட்டும் அல்லாமல், நடிகையர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களான “யூ டர்ன்”, “ஓ பேபி” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

லேட்டஸ்ட் பிக்ஸ்:

பொது முடக்கத்தின் போது விதவிதமாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஆச்சிரியம் அடைந்தனர். அவ்வப்போது விதவிதமான வண்ணங்களில் ஆடை அனைத்தும் போட்டோ சூட் எடுத்து பதிவிட்டு வந்தார்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 20 லட்சம் பேர் விண்ணப்பம் – தமிழக தேர்தல் ஆணையம்!!

சமீபத்தில் தனது கணவருடன் மாலத்தீவிற்கு சென்ற சமந்தா வெறும் பிகினி மட்டும் அணிந்திருந்த போட்டோவை வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில், தற்போது, அவர் நீல நிற உடலில் கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அந்த உடை நவீன ட்ரெண்டிற்கு ஏத்தது போல் உள்ளது. அவர் “சாம் ஜாம்” என்ற பட ஷூட்டிங்க்காக இந்த உடையை அணிந்து சென்றுள்ளார். இந்த உடைக்கு மேட்சாக அவர் காதணிகளை அணித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -