தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை நடத்தலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு கல்வித்துறை சார்பில் இருந்து எந்த ஒரு ஆட்சபனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அச்சம்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பொது முடக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்ததால், மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 6 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதமே பள்ளிகளை திறந்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது. ஆனால், மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறந்து கொள்ளாலாம் என்று தெரிவித்து இருந்தது. தமிழகத்தில் மாணவர்களின் ஆரோக்கிய நலன் கருதி பள்ளிகள் இன்னும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
அமைச்சர் விளக்கம்:
கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையில், மாணவர்கள் காலாண்டு தேர்வுகளை கூட எழுதவில்லை. தற்போது டிசம்பர் மாதம் துவங்கி உள்ளதால் எப்போதும் போலவே அரையாண்டு தேர்வுகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை வைத்து வந்தது. இதனால் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகளை நடத்தலாம், அதில் ஆட்சபனை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகளை திறக்க இதுவே சரியான நேரம்!!
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகளை அரசு தள்ளி வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றால் 50 சதவீத பாடங்களை இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.