8 வருடங்களுக்கு பிறகு கழுத்தில் தாலியுடன் கர்ப்பமாக இருக்கும் வெண்பா – ஷாக்கான ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக 8 வருடங்களுக்கு பிறகு கதையை கொண்டு செல்கின்றனர். மேலும் வெண்பா வேறு கர்ப்பமாக இருப்பது போல கட்டப்படுகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பராதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு வெண்பாவுடன் திருமணம் நடக்குமா?? அல்லது வெண்பா பற்றிய உண்மைகள் தெரிய வருமா?? என பல சூச்சமங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. நேற்றைய எபிசோடில் கண்ணம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காத பாரதி வெண்பா கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என்று நிற்க உனக்கு இந்த கேடுகெட்டவ தான் சரியா வருவா என்று காரி துப்பிவிட்டு அங்கிருந்து சென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக கோவிலை விட்டு கண்ணம்மா வெளியே வர அங்கு கெட்டிமேல சத்தம் வேறு கேட்கிறது. இதனால் அவர்களுக்கு தான் கல்யாணம் நடந்தது என நினைத்து கொள்கிறார் கண்ணம்மா. தனியாக வாழ்ந்து சாதிப்பேன் என்றும் சொல்லிவிட்டு நடக்கிறார். நாமும் பாரதிக்கு திருமணம் நடந்து விட்டதா?? என இருக்க இன்றைய எபிசோடு மிகவும் ஷாக்காக உள்ளது.

எடுத்த எடுப்பிலேயே வெண்பா கர்ப்பமாக இருப்பதை காட்டுகின்றனர். காலையில் எழுந்து வெண்பா சாமி கும்பிட்டு அனைவர்க்கும் பிரசாதம் கொடுக்கிறார். சௌந்தர்யாவும் இந்த நேரத்தில் இப்படி செய்யலாமா என்று திட்ட மாடியில் ஏறும் போது கீழே விழ போகிறார். ஐயோ என்று இருந்தால் அது மொத்தமும் வெண்பாவின் கனவு.

நீண்ட கால தோழியை மணந்தார் கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி!!

அத்தை என்று கத்திகொண்டே கனவில் இருந்து எழுகிறார். அப்போ அன்னைக்கு என்ன நடந்து இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்கும்போதே வெண்பாவும் பழைய நினைவுக்கு செல்கிறார். அப்படி என்ன நடந்திருக்கும் என்று பார்த்தால் பாரதி வெண்பாவிற்கு தாலி கட்டும் நேரத்தில் சௌந்தர்யா அங்கு வந்து விட வெண்பாவையும், பாரதியையும் கேவலமாக திட்டுகிறார்.

எனக்கு மருமகள் அப்டினா அது கண்ணம்மா மட்டும் தான் என்று கூறுகிறார். பாரதி இதனால் கோவப்படுகிறார். இதனால் சௌந்தர்யா நான் கோர்ட்டுக்கு போவேன் என்று சொல்ல பாரதியால் எதுவும் சொல்ல முடியவில்லை. கண்ணம்மா நல்லவள்னு சொல்ல உங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு என்று பாரதி கேட்க அதற்கு சௌந்தர்யா என் மனசாட்சி இருக்கு அது போதும் என்று கூறுகிறார்.

கடைசியாக பாரதியிடம் ‘உனக்கு மனசுல தில்லு இருந்தா நீ தாலி கட்டு பாப்போம், நான் இங்க தான் நிற்பேன்’ என்று சொல்ல பாரதி தாலியை பார்த்து யோசிக்கிறார். கடைசியில் தாலியை கீழே போட்டு விடுகிறார். மேலும் சௌந்தர்யா பாரதியிடம் இருக்கும் தாலியை வாங்கி வெண்பா முகத்தில் வீசுகிறார். அடுத்ததாக பாரதியை இழுத்துக்கொண்டும் செல்கிறார்.

வெண்பா அங்கிருந்தே தாலியை பார்த்து கதறி அழுகிறார். இவ்வாறு நடந்தவற்றை நினைத்து கொண்டுள்ளார் வெண்பா. அதன் பின் அன்றைக்கு மட்டும் சௌந்தர்யா வராம இருந்து இருந்தா இப்போ பாரதிக்கு மனைவியா இருந்து இருப்பேன் என்று கூறி ஆத்திரமடைகிறார். மேலும் கண்ணம்மாவிற்கு நான் போட்ட விஷ ஊசியால் இந்த 8 வருடத்தில் செத்து போயிருப்பாள் என்று கூறி சிரிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here