Tuesday, May 14, 2024

‘புரெவி’ புயல் எதிரொலி – 10 மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டித் தீர்க்கும்!!

Must Read

புரெவி புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தற்போது புயலாக மாறியுள்ளது.

புரெவி புயல்:

கடந்த மாதம் 24ம் தேதி உருவான நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால், வட மாநிலங்களில் கனமழை பெய்தது. கடந்த நவம்பர் 28ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று மாலை அல்லது இரவில் திருகோணமலையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

புரெவி புயல் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புயல்:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் தற்பொழுது திருகோணமலைக்கு 300கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரி 700கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு 530கி.மீ தொலைவிலும் உள்ளது. புரெவி புயல் 6 மணிநேரத்தில் வலுப்பெற்று இன்று திருகோணமலை அருகே கரையை கடக்கவுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவிப்பு – சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி!!

நாளை காலை மன்னார் வளைகுடா அருகே புரெவி புயல் நகர்ந்து வரும் என கூறப்படுகிறது. 12கி.மீ வேகத்தில் வரும் புரெவி புயல் கரையை கடக்கும் போது 95கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாளை மறுநாள் அதிகாலையில் குமரி-பாம்பனுக்கு இடையே தென்தமிழக கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -