மீனாவை தங்கள் வீட்டிற்கு அழைக்கும் ஜனார்த்தனன் – கோபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவால் வீட்டில் பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் மீனாவை பார்க்க வீட்டிற்கு வரும் ஜனார்த்தனன் குழந்தை தனியாக இருப்பதை பார்த்து கோவமடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 

பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்றைய எபிசோடில் மீனா கால் பண்ணி அழுததை கலை ஜனார்தனிடம் சொல்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன் ஜீவா வீட்டுக்கு வருகிறார். ஜீவாவின் அம்மா,மீனாவிடம் குழந்தை அழுதால் என்னனு பாரு, நீயும் சேர்ந்து அழுது ஆர்ப்ட்டம் பண்ணாதனு சொல்கிறார்கள்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது மீனாவுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. முல்லை, மீனாவுக்கு சத்தான சாப்பாடு செய்து தரவேண்டும், என்று கஸ்தூரிக்கு போன் பண்ணுகிறார். கஸ்தூரியும் முல்லைக்கு சில ரெசிபிக்களை சொல்கிறார். அதை முல்லை தயார் செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் மீனா, முல்லையை பார்த்து பாவம் முல்லை அவரே தனியாக எல்லா வேலையும் செய்து கஷ்ப்படுகிறார், நம்மளும் எதாவது அவருக்கு உதவும் வகையில் செய்யலாம் என எண்ணி, குழந்தையின் துணிகளை மீனாவே துவைக்க செல்கிறார். துணி துவைக்கும் போது, மீனா தன் அப்பா வீட்டில் மகிழ்ச்சியாக இருந்ததை நினைத்து கண்கலங்குகிறார்.

தான் தனியாக இருப்பதாக எண்ணி அழுது புலம்புகிறார். அந்த வேளையில் மீனாவின் அப்பாவும்,அம்மாவும் அங்கு வருகின்றனர். குழந்தை தனியாக இருப்பதையும் வீட்டில் குழந்தை பக்கத்தில் யாரும் இல்லாததையும் கவனிக்கிறார். குழந்தை தொட்டிலை சுற்றியும் ஒரே எறும்பாக வேற உள்ளது.

இதனால் கோபப்படுகிறார் மீனாவின் அப்பா. மீனா துணி துவைப்பது வேறு அவரின் காதுக்கு வரவே,உச்சகட்டக்கோபத்தில் முல்லையை திட்டுகிறார்.மீனா எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.. ஜீவாவின் அம்மா, அவரை சமாதானம் செய்ய அவரையும் திட்டுகிறார் ஜனார்த்தனன்.

மேலும் மீனாவை அவர் தன் வீட்டுக்கு வருமாறும் கூறுகிறார். இதற்கு ஜீவாவின் அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார். என் பொண்ணை நான் அழைத்து செல்ல யாரிடம் கேட்க வேண்டும் என கூறுகிறார் ஜனார்தன். இதோடு இன்றைய எபிசொட் முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here