Friday, May 17, 2024

ஆஸ்திரேலிய தொடரில் பங்குபெற இடம் கிடைக்காதது ஏமாற்றமே – சூர்யகுமார் யாதவ் வேதனை!!

Must Read

இந்திய கிரிக்கெட் அணியின் 3 ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு பங்கு பெறவதற்கு வாய்ப்பு கிட்டவில்லை. இது வரும் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடர் நடைபெற உள்ளது. மேலும் அந்த தொடரில் பங்கு பெறுவதற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது வேதனை அளிக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

சூர்யகுமார் யாதவின் ஏமாற்றம்

சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர். இவர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து சிறப்பாக விளையாடி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். இந்திய அணி பங்கேற்கும் ஒரு நாள் தொடருக்கான போட்டி வரும் நவ. 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறயுள்ளது. இந்திய அணியின் 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர்கள் மற்றும் 4 நாள் டேஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிட்னி சென்றுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் அவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வாய்ப்பு அமையவில்லை. இது குறித்து தெரிவித்த சூர்யகுமார், வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் பங்குபெறுவதற்கு இடம் கிடைக்காதது எனக்கு ஆழ்ந்த வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆறுதல் வார்த்தை

தனது வேதனையை ரோஹித் சர்மாவிடம் தெரிவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அப்பொழுது ரோஹித் சர்மா, தற்போது எதை பற்றியும் யோசிக்காமல் அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு தயார் ஆகுங்கள் என்றும், எப்பொழுதும் விளையாடுவது போன்றே விளையாடு என்றும் தெரிவித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உனக்கான சிறப்பான நேரம் விரைவில் அமையும் என்று அவரது ஆறுதல் வார்த்தைகளை சூர்யகுமார் யாதவுக்கு வழங்கினார். பின்பு சூர்யகுமார் யாதவ் அவரது வார்த்தை தனக்கு ஆறுதலாக இருந்தது என்றும், தன்னை மேலும் தயார்படுத்தி கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -