கொரோனா பரவல் காரணமாக வருமான வரியினை செலுத்த காலஅவகாசம் மேலும் 2 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக காரணமாக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. அதே போல் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட மிகுந்த சிரமம் அடைந்தனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பலருக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டது. மக்களின் நலன் கருதியும் தற்கால சூழலை கருத்தில் கொண்டும் வருமான வரித்துறையினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது. இந்த உத்தரவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெளியிடப்பட்ட அறிக்கை:
தற்போது இந்த காலஅவகாசம் முடிய உள்ளதால் வருமான வரித்துறையினர் மேலும் காலாவகாசத்தை நீடித்துள்ளனர். மேலும் 2 மாதங்கள் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது “கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய நவம்பர் 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.