புதுவையில் காவலர் ஒருவருக்கும் சட்டப்பேரவை உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், புதுச்சேரி சட்ட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று:
கடந்த சில நாட்களாக பரவலாக இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நிறைய நபர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
டெலிகிராமில் தகவல் பெற கிளிக் செய்யவும்
கடந்த சில நாட்களுக்கு முன் என் ஆர் காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், சட்டப்பேரவை 29 ஆம் தேதி வரை செயல் படாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மறுபடியும்:
தற்போது, புதுவையில் உள்ள சட்டப்பேரவை காவலர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாலும், மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாலும், சட்டப்பேரவை இன்னும் இரண்டு நாட்களுக்கு செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!
அதாவது 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை செயல்படாது என்று கூறியிருக்கின்றனர். இந்த செய்தி சட்ட பேரவை செயலர் முனுசாமி கூறியுள்ளார். இது மற்றவர்களுக்கு பரவ கூடாது என்பதற்காக முடிவு செய்யப்பட்டு உள்ளது.