தமிழகத்தில் இன்று (ஜூலை 28) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்கால் ஆகிய வட கடலோர மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு “கிரேடு” முறையா?? – செங்கோட்டையன் ஆலோசனை!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது