நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்ற பொது சீட் பெல்ட் அணையவில்லை என்று அவருக்கு காவல்துறை அபராதம் விதித்து உள்ளனர்.
“லம்போவில்” பயணம்:
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான “லம்போகிரிணி” காரில் பயணம் செய்வது போன்ற புகைப்படம் பரவலாக எல்லா வலைத்தளங்களிலும் பரவி வந்தது.
இது நெட்டிஸின்களுக்கு நல்ல தீனி அளித்தது போன்றும் இருந்தது. நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டது என்னவென்றால், அவர் முறையாக இ-பாஸ் பெற்று தான் தனது காரில் சென்று உள்ளார் என்றும்,அவர் இ-பாஸ் மருத்துவ அவசரத்திற்காக தான் பெற்றார் என்றும் கூறப்பட்டது. அவர் தனது கேளம்பாக்கத்தில் உள்ள விடுதிக்கு செல்ல தான் பெற்றார் என்பது கூடுதல் தகவல்.
கொரோனாவை அடுத்து டெங்குவிற்கு முதல் பலி – சென்னையில் பயங்கரம்!!
ஆனால், நன்றாக கார் ஓட்டும் ரஜினி அவர்களுக்கு அப்படி என்ன மருத்துவ அவசரம் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும், அவர் தனக்கு மட்டும் தான் இ-பாஸ் எடுத்து இருந்தார் என்று கூறப்படுகிறது, அப்படி என்றால் யார் புகைப்படத்தை எடுத்து இருக்க முடியும் என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.
அபராதம்:
தற்போது அடுத்தபடியாக இன்று தனது காரில் சென்ற போது சீட் பெல்ட் அணியாமல் சென்று உள்ளார் என்று போக்குவரத்துக்கு துறை அதிகாரிகளால் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.