டெல்லியில் உள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான தடுப்பு மையம் ஒன்றில் 14 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தல் மையத்தில் பாலியல் தாக்குதல்
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பலரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 10,000 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரிதேஷ் தேஷ்முக்கை ஈர்த்த 75 வயது வீரப்பெண்!!
பாதிக்கப்பட்ட சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய, 19 வயது இளைஞர் மற்றும் அதனைப் படம் பிடித்த இன்னொருவரும், வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குணமாகும்வரை தனிமைப்படுத்தல்
அந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை, தனது உறவினர்களிடம் தெரிவித்த பின்னர் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அவர்கள் கொரானா தொற்றிலிருந்து குணமாகும்வரை தனிமைப்படுத்தல் மையத்திலேயே இருக்க வைக்கப்படுவர் என்று மூத்த காவல்துறை அதிகாரி பர்விந்தர் சிங் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது முதல் முறையல்ல
கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் பாலியல் தாக்குதல் நடந்தேறியது இது முதல் முறையல்ல. மும்பையில் உள்ள கொரானா தொற்று நோயாளிகளுக்கான தடுப்பு மையம் ஒன்றில், 40 வயது பெண் மீது 25 வயது இளைஞர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை போன்று, பட்னாவில் தனிமைப்படுத்தல் மையத்தில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதால் ஒரு நபர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது