Wednesday, April 24, 2024

ரிதேஷ் தேஷ்முக்கை ஈர்த்த 75 வயது வீரப்பெண்!!

Must Read

வயது முதிர்ந்த பெண்மணியின் தற்காப்பு கலை திறனால் ஈர்க்கப்பட்ட நடிகர் ரிதேஷ் தேஷ்முக் அவரது காணொளியை வியாழக் கிழமை அன்று அவரது இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார்.

75 வயது பெண்ணின் தற்காப்பு கலை

புனேவை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக, தற்காப்பு கலைகளை சாலைகளில் செய்து மக்களிடம் பணம் ஈட்டி வருகிறார். அப்பெண்ணின் தற்காப்பு கலை காணொளி, ஹதிண்டேர் சிங் என்ற டுவிட்டர் பயனாளியால் முதலில் பகிரப்பட்டது. பின் ரிதேஷ் தேஷ்முக்கால் மீண்டும் பகிரப்பட்டு மற்றும் பாராட்டப்பட்டது.

பகிரப்பட்ட காணொளி

ஹதிண்டேர் சிங், அந்த காணொளியை பகிரும்போது, புனேவை சேர்ந்த இந்த அம்மா, வீதிகளில் தனது வாழ்வாதாரத்திற்காக சிலம்பக் கலையை செய்து காட்டுகிறார் என்றும், இன்றைய சூழலின் அவசர நிலை  மற்றும் ஊரடங்கினாலும், வேறு எதிலும் வருவாய் ஈட்ட இயலாத நிலையுமே இவ்வாறு இவர் பணம் ஈட்டுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிதேஷ்க்கு பாராட்டு

முகக்கவசம் அணிந்து மந்திரக் கோள் போன்று குச்சிகளை கையாளும் இப்பெண்ணின் காணொளியை கண்ட ரிதேஷ், இவர் ஒரு போர்வீரர் என்றும், இவரை பற்றிய தகவல்கள் கிடைக்குமா என்றும் காணொளியை பகிர்ந்து கேட்டுள்ளார்.

பின்னர், அப்பெண்ணை தொடர்பு கொண்டுவிட்டதாகவும், அவரது வாழ்க்கை கதை நம்ப முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி. ஒன்பது லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, 24,000 லைக்குகள் பெற்று, ஆயிரம் பேரால் மீண்டும் பகிரப் பட்டுள்ளது. மேலும் அவருக்கு உதவிசெய்த ரிடேய்ஸ்க்கு பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -