கரூரில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
காவல் ஆய்வாளரின் டிரைவருக்கு கொரோனா:
கரூர் நகர போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றும் காவலருக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று வெளியான முடிவில் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக் காவலர்கள் 30 பேருக்கு இன்று (ஜூலை 23) கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
கொரோனாவால் களைகட்டிய ‘செக்ஸ் பொம்மைகள்’ ஆன்லைன் விற்பனை – மும்பை முதலிடம்!!
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் முதல்நிலை காவலர் ஆகிய இருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்குத் திரும்பினர்.
கடைக்காரர்களுக்கும் தொற்று:
மேலும், திண்டுக்கல் சாலையில் உள்ள திரையரங்கம் எதிரே உள்ள டீக்கடைக்காரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அருகேயுள்ள மேன்ஷனில் தங்கியிருந்தவருக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதனால் மேன்ஷனில் தங்கியுள்ளவர்களுக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மேலும், பஞ்சமாதேவியில் மளிகை நடத்தி வருபவர், திருச்சியில் மளிகை நடத்தி வரும் தோகைமலை பகுதியைச் சேர்ந்தவர் என மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது கரூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.