கடத்தல்காரர்களிடமிருந்து மகளை காப்பாற்ற போராடும் தாய் – வைரல் வீடியோ..!

0

டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் சம்பவத்தில் குழந்தையின் சொந்த பெரியப்பாவே கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை காப்பாற்ற போராடும் தாய்..!

ஷாஹர்பூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு தெருவில் 4 வயதுடைய தனது மகளை கடத்தல்காரர்களிடமிருந்து குழந்தையின் தாய் போராடி மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் விசாரணையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் டெல்லியை சேர்ந்த பூபேந்தர் மற்றும் தீரத்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதில் பூபேந்தர் என்பவர் கடத்தப்பட்ட குழந்தையின் சொந்த பெரியப்பா என்பது தெரியவந்தது.

100 பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு – புதுவை அரசு அதிரடி நடவடிக்கை..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்த பூபேந்தர் வசதியான நிலையில் இருக்கும் தமது தம்பியிடமிருந்து பெருமளவு பணத்தை அபகரிக்கவே இத்திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை கடத்த முயன்றபோது, தனது நண்பருடன் சிக்கிக்கொண்டதாக கடத்தலில் ஈடுபட்ட பூபேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் இருவர் மீதும் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here