இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், கோலிவுட்டின் சிறந்த நடிகரான, நடிகர் சூர்யா.
நடிகரின் வாரிசு:
சூர்யா, தமிழ் திரையுலகின் மார்கண்டேயர் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். அவரின் இயற்பெயர், சரவணன். இயக்குனர் மணிரத்னம் அவர்களால் சூர்யா என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தனது பட்டய படிப்பை முடித்து உள்ளார்.
இறுதி ஆண்டு தேர்வுகள் குறித்து யு.ஜி.சி விளக்கம் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!
அவரது முதல் படம் ” நேருக்கு நேர்” ஆகும். அதில் நடிகர் விஜய் உடன் நடித்து இருப்பார். அந்த படம் பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும், நடிகர் சூர்யாவின் விடாத முயற்சியால் திரைத்துறையில் சாதித்து வருகிறார். அடுத்து அடுத்து அவர் தனது சிறப்பான நடிப்பால் அவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். அவர் நடித்த “நந்தா” திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்று தமிழ்நாடு சிறந்த நடிகர் விருதை பெற்று உள்ளார்.
நடிப்பு மட்டும் அல்ல:
நடிகர் சூர்யாவின் படத்தில் ஒரு தனித்துவம் இருக்கும் என்று கூட சொல்லலாம். அவர் நடிக்கும் படங்களில் ஒரு கருத்து சமூகத்திற்காக இருக்கும். அவர், பிரபல நடிகை ஜோதிகாவை மணந்து உள்ளார்.
அவர், தற்போது நடிப்பு மட்டும் அன்றி பாடல்கள் பாடுவது மற்றும் தனக்கு என்று சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் வைத்து உள்ளார். அவர் சமூகத்திற்காக மற்றும் நன்றா படிக்கும் மாணவர்களுக்காக “அகரம்” என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். அதில், படிக்கச் வேண்டும் என்று ஆர்வமுள்ள மாணவர்களை தனது சொந்த செலவில் படிக்கச் வைக்கிறார்.
தற்போது..!!
தற்போது சூர்யா “சூரரை போற்று” என்று திரைப்படத்தில் நடித்து உள்ளார். அதில் இடப்பெற்ற பாடல்கள் வைரலாக பேசப்பட்டது. தனது பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவிற்கு திரைபிரபலன்கள், அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.