தமிழகத்தில் புதிதாக அதுவும் இரெண்டாவது முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டு உள்ளார். நாகமலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு அறநிலையத்துறை சார்பில் நியமிக்கபட்டு உள்ளார்.
அரசாணை:
கடந்த 2006 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சி காலத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அரசு ஆறு சைவ, வைணவ வேத ஆகம பாடசாலைகளில் 200 பெருகும் மேற்பட்டோர் பாடசாலைகளில் பயின்று வந்தனர்.
ஒரு ஆண்டு மட்டுமே இந்த அரசனை பின்பற்றப்பட்டது, பாடசாலைகளில் பாடம் நடத்துவது நிறுத்தப்பட்டது. இதனிடையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு 36 வயதான மாரியப்பன் என்பவர் முதல் பிராமணர் அல்லாத அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
தற்போது இரண்டாவது அர்ச்சகர்:
மதுரை ஆரப்பாளையத்தில் வசிக்கும், எலக்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் டிப்ளமோ படித்த தியாகராஜன் என்பவர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வேத ஆகம படிப்பை படித்தார். பின்பு, ஒரு வருடம் ஒரு கோயிலில் அர்ச்சகரப் பணிபுரிந்தார். அதன்பின், மலேசியாவில் ஐந்து ஆண்டுகள் அர்ச்சகராகாப் பணியாற்றினார். மலேசியாவிலிருந்து திரும்பியதிலிருந்து ஆரப்பாளையத்தில் உள்ள கோயில்களில் பூஜைகள் செய்தார்.
ஏற்கனவே கோவில் பணி:
அதே நேரத்தில், மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோயிலில் தமிழகத்தின் முதல் பிராமணர் அல்லாத அர்ச்சகராக 2018-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த மாரிசாமியை நியமித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தியாகராஜன் தமிழகத்தின் 2வது பிராமணர் அல்லாத அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது 15 வயதில் இருந்தே சமய சடங்குகளில் ஆர்வம் கொண்டவர் என்பது குறிபிடத்தக்கது