மதுரையை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவர் மனுதாக்கல்..!
கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பு..!
இதையடுத்து, சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கண்டுபிடித்துள்ள சித்த மருந்தை ஜூன் 26ம் தேதி ஹோமியோபதி இயக்குநரிடம் அளிக்க வேண்டும் எனவும் மருந்தை ஜூன் 30 தேதிக்குள் நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என உய்ரநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.