தாய்லாந்தில் கொரோனா வைரசுக்கு எதிராக குரங்குகளிடம் நடத்தப்பட்ட தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் தடுப்பூசி..!
உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் தாய்லாந்து நாடு கொரோனா வைரசுக்கு எதிராக தடடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை முதற்கட்ட சோதனையாக கடந்த மாதம் 23ம் தேதி குரங்குகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டன. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பரிசோதனை வெற்றி..!
இதைத்தொடர்ந்து இந்த குரங்குகளுக்கு அடுத்தகட்ட பரிசோதனைக்காக நேற்று 2 வது டோஸ் மருந்து ஏற்றப்பட்டது. இந்த சோதனையும் வெற்றி பெற்றால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என தாய்லாந்து அறிவியல், உயர்கல்வி, ஆய்வுத்துறை மந்திரி சுவிட் மாய்சின்சீ தெரிவித்தார்.