இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஐபிஎல் – ராஜஸ்தான் யோசனைக்கு சென்னையின் பதில்..!

0

இந்திய வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கிய யோசனைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஐபிஎல் 2020:

மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பயணம் வருவதில் சிக்கல்கள் நிலவுவதால் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக தலைவர் யோசனை வழங்கி இருந்தார். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் – வாயைத்திறந்த பிசிசிஐ..!

இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் இன்னொரு சையத் முஸ்தாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடராக தான் இருக்கும் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. கொரோனா தாக்கம் முடிந்த பிறகு கிரிக்கெட் வாரியம் உரிய ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் எனவும் ஆண்டு இறுதியில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் எனவும் சிஎஸ்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here