ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2020ம் ஆண்டிற்கான சீசன் ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. நிதி குறித்து பிசிசிஐ பேசுவது இதுவே முதல்முறையாகும்.
ஐபிஎல் 2020:
இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளின் 13வது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்த நிலையில் வீரர்கள் பாதுகாப்பு கருதி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வீரர்களும் பயணம் செய்ய முடியாத காரணத்தால் ஐபிஎல் நடைபெறுவதில் நிறைய சிக்கல் நிலவுகிறது.
செல்ல நாயுடன் விளையாடும் சாக்ஸி & தோனி – வைரலாகும் வீடியோ..!
இதனால் ஐபிஎல் 2020ம் ஆண்டிற்கான சீசன் நடக்காவிட்டால் 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறியுள்ளார். இருப்பினும் எத்தனை போட்டிகள் நடைபெறாமல் போகிறதோ அதைப் பொறுத்துதான் சரியான இழப்பீடை தெரிவிக்க முடியும் என தெரிவித்து உள்ளார். மேலும் ஐபிஎல் ப்ராண்ட் மதிப்பின் மூலம் 6.7 பில்லியன் டாலர் வருவாய் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் 200 மில்லியன் டாலர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |