கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவால் எம்எஸ் தோனி தனது குடும்பத்துடன் நாட்களை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் செலவழித்து வருகிறார். அவர் தற்போது தனது நாயுடன் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
எம்எஸ் தோனி வீடியோ:
இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மனைவி சாக்ஸி, மகள் ஜிவா மற்றும் தனது நாயுடன் பொழுதை கழித்து வருகிறார்.
தற்போது அவர் தனது நாயுடன் விளையாடும் வீடீயோவை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அதில் தோனி தூக்கிப்போடும் பந்தை கேட்ச் செய்யாத நாய், சாக்ஸி கூறும் பொழுது மட்டும் கேட்ச் செய்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |