தமிழகத்தில் நடைபெற உள்ள பள்ளிப் பொதுத்தேர்வுகளில் மாணவர்களை அழைத்து வரவும் மீண்டும் அவரவர் பகுதிகளில் விடவும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1 முதல் ஜூன் 12ம் தேதிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுகால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி தேர்வை தவறவிட்ட 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதியும், 11ம் வகுப்பில் நிறுத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கு ஜூன் 2ம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேர்வறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |