ஊரடங்கு உத்தரவுகளை மீறி டெஸ்லா தொழிற்சாலையை திறந்து உள்ள எலான் மஸ்க் முடிந்தால் என்னை முதலில் கைது செய்யுங்கள் என சவால் விடுத்து உள்ளார்.
கோடீஸ்வரர் எலான் மஸ்க்:
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன எலான் மஸ்க் அமெரிக்காவின் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவர். அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் எலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் ப்ரமோண்ட் நகரில் உள்ள உற்பத்தி தொழிற்சாலையை திறந்து உள்ளார்.
இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பதிவில், டெஸ்லா நிறுவனம் அலமேடா மாகாணத்தில் மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்கிறது, யாரையாவது கைது செய்ய வேண்டும் என்றால் என்னை மட்டும் கைது செய்யுங்கள். நானும் அங்கு தான் இருப்பேன் என தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அம்மாகாண அதிகாரிகள் மற்றும் போலீசார் எலான் மஸ்க் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கு முன்னர் அலமேடா மாகாண விதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த எலான் மஸ்க், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்க அனுமதிக்காவிட்டால் அங்கிருந்து நெவாடா அல்லது டெக்சாஸிற்கு தொழிற்சாலையை மாற்றி விடுவேன் எனவும் தெரிவித்து இருந்தார். அதற்கு 30% பணியாளர்களுடன் தொழிற்சாலையை இயக்க அலமேடா நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |