அந்தமான் தீவுகளில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அந்தமானில் புயல்:
சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இது வரும் மே 15ம் தேதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பின்னர் மீண்டும் அதிகளவில் வலுப்பெற்று 16ம் தேதி அந்தமானில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இதனால் 60 – 75 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. புயலால் சூறைக்காற்று உருவாக வாய்ப்புள்ளதால் தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |