தமிழக கல்லூரிகளில் இரு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து – கல்வி இயக்ககம் முடிவு..!

0

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய கல்லூரிகள் கல்வி இயக்ககம் முடிவு செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இரு சுழற்சி வகுப்புகள்:

தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை, மதியம் என இரண்டு வேளைகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இரு சுழற்சி முறையினை ரத்து செய்ய தமிழக கல்லூரிகள் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. இந்த முறையினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் செங்கோட்டையன்..!

காலை நேர கல்லூரிகளில் 7.30 மணிக்கே வகுப்புகள் தொடங்கி விடுவதால் கிராமப்புற மாணவர்கள் முறையாக உணவருந்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ரத்த சோகை போன்ற நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே 2006ம் ஆண்டுக்கு முன்னர் பின்பற்றப்பட்டு வந்த வகுப்பு முறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here