கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்கொல்லி கொரோனா..!
சீனாவில் தொடக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் – கேரளாவில் முதல் பலி..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் 170 மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவர் இன்று உயிரிழந்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |