ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளர் கரு. பழனியப்பன் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொகுப்பாளர் விலகல்
தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பேவரைட் டாக் ஷோக்களில் ஒன்று ‘தமிழா தமிழா’. விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் பார்மேட்டில் துவங்கப்பட்ட இந்த ‘தமிழா தமிழா’ ஷோ மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வந்தது. அந்த வகையில், 4 சுமார் ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி தற்போது முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது குறித்து ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல திரைப்பட இயக்குனருமான கரு.பழனியப்பன் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், ‘எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. இப்படி முகம் அறியாத தோழமைகளின் அன்பு மற்றும் ஆசிரியர்களின் அறிவு இந்த முடிவை எடுக்க வழிகாட்டியது.
மக்களே உஷார்., நாளை இந்த சேவை கிடைப்பதில் சிக்கல்! நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!!
ஜீ தமிழ் உடனான நான்கு வருட ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சி இனிதே முடிவுக்கு வந்துள்ளது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிது’ என்று click here குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் கரு.பழனியப்பன் தமிழில் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.