மக்களே உஷார்., நாளை இந்த சேவை கிடைப்பதில் சிக்கல்! நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!!

0
மக்களே உஷார்., நாளை இந்த சேவை கிடைப்பதில் சிக்கல்! நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!!
மக்களே உஷார்., நாளை இந்த சேவை கிடைப்பதில் சிக்கல்! நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிகழ்ச்சிகளில் ஹோலி பண்டிகையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மக்கள் தங்கள் மீதான தவறான எண்ணங்களை விடுத்து நல்ல எண்ணங்களை வெளிப்படுத்த கலர் பொடிகளை பூசி மகிழ்வார்கள். இந்த பண்டிகை வடமாநிலங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது வடமாநில தொழிலாளர்களின் வருகையால் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் இந்த ஹோலி பண்டிகை சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை, நிகழ்ச்சி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் ஹோலி பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு நாளை (மார்ச் 8) விடுமுறை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம் போல் செயல்படும். ஆனால் வெளிப்புற நோயாளிகளுக்கு (Outpatient) சிகிச்சை வழங்கப்படாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மார்ச் 9ம் தேதி முதல் அனைத்து சிகிச்சை பிரிவுகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here