தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மொட்டை மாடியில் இருந்து ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
தமிழ் திரைவுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் தான் யாஷிகா. இவர் ஆரம்பத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஆனால் அவரை அடையாளம் காட்டியது முரட்டு கூத்து திரைப்படம் தான். அந்த படத்திற்கு பிறகு யாஷிகா யாஷிகா என இளசுகள் வட்டமிட ஆரம்பித்தனர். பின்பு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த இவர் நாளாக அவரது சேட்டைகளை ஆரம்பித்து விட்டார். இவரும் மகத்தும் இணைந்து செய்த அட்டகாசங்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகா படவாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார். இதனால் அவர் காய் வசம் எடுத்த யுக்தி தான் போட்டோஷூட். பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
மார்ச் மாதத்தில் ஆரம்பித்து இவரது இந்த போட்டோஷூட் தற்போது வரை முடிவடையவில்லை. நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டி தான் வருகிறாரே தவிர குறைத்த பாடில்லை. தற்போது மொட்டை மாடியில் அவர் செய்திருக்கும் ரீல்ஸ் பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
View this post on Instagram