கதிர் கையில் சிக்கும் மகேஷ்வரிக்கு எதிரான ஆதாரம் – பூவரசியை காப்பாற்றுவாரா??

0

பூவே உனக்காக சீரியலில் தற்போது மகேஸ்வரி தனது நாடகத்தில் கதிரையும் அவரது அம்மாவையும் வீட்டை விட்டே துரத்தி விட்டார். இந்நிலையில் கதிர் புதிய அவதாரமாக பூவரசியை காப்பாற்றும் பணியில் இறங்கி விட்டார்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து பூவரசி மீது தேவையில்லாத பழியை போட்டு இருவரையும் பிரித்து வேடிக்கை பார்த்தார் மகேஸ்வரி. கடைசி நேரத்தில் அன்ஹா நர்ஸ் வந்து உண்மையை கதிரிடம் வந்து சொல்ல தான் செய்த தவறை நினைந்து வருந்துகிறார்.

ஆனால் பூவரசி அன்றைக்கு எவ்வளவு கெஞ்சியும் கதிர் கேட்டதாக இல்லை. அதனால் தான் கதிரை மொத்தமாக வெறுத்து விட்டார். இப்பொழுது கதிர் திருந்தி எந்த பிரயோஜனமும் இல்லை. பூவரசியின் அப்பாவும் கதிருக்கு எதிராக திரும்பி விட்டார்.

இப்பொழுது மகேஸ்வரி பற்றிய உண்மையை எப்படி வெளியே சொல்வது ஆதாரம் வேண்டுமே என்று யோசித்து கொண்டுள்ளார். அப்படி கதிர் கையில் முக்கிய ஆதாரம் ஏதோ ஒன்று சிக்கியுள்ளது. கையில் ஒரு பேன்டிரைவுடன் பூவரசியை உன்னிடம் இருந்து காப்பாற்றுவேன் என்று சபதமிடுகிறார். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here