தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். எப்படியாவது படவாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் யாஷிகா தொடர்ந்து பல போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
தமிழில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அந்த படம் அவருக்கு அவ்வளவாக கைகொடுக்கவும் இல்லை. சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் பள்ளி காலத்திலேயே மாடலிங்கில் சேர்ந்தார்.
அதன்பிறகு தான் அவருக்கு ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்கும்போது யாஷிகாவிற்கு 18 வயது தானாம். அவரின் உருவத்தை பார்த்து 18 வயது என்றவுடன் யாராலும் நம்பவும் முடியவில்லை. ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அதன் பிறகே அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதனை யாஷிகா சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். தனது அனைத்து முயற்சிகளையும் அதில் காட்டி கடைசியில் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றார்.
ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஐவரும் யாஷிகாவும் செய்யத அலப்பறைகளே கிடையாது. மகத்துடன் காதல், ஹவுஸ் மேட்ஸ் உடன் மோதல் என பிக் பாஸ் ரசிகர்களையே கதிகலங்க வைத்து விட்டார் யாஷிகா. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய யாஷிகா ஜாம்பி என்ற படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மேலும் பல படங்களில் குத்து பாடல்களுக்கு நடனமாடவும் செய்தார்.
அதனை தோடர்ந்து பல போட்டோஷூட்டுகளையும் நடத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.