உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 6,500 க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ..!
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்குதலால் 3 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாரஷ்டிராவில் மொத்தம் 39 பேரும், கேரளாவில் 24 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு பாராட்டு ..!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ஹெங்க் பெகெதம் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது , இந்தியாவில் சிறந்த ஆராய்ச்சி வசதி உள்ளது. ஐசிஎம்ஆர் உள்ளிட்டவை சிறப்பாக செயல்படுகிறது.
அவர்களால் வைரசை தனிமைப்படுத்த முடியும். இந்திய அரசின் உயர்மட்டத்தில் இருந்து குறிப்பாக பிரதமர் அலுவலகமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது எனவும் ஆராய்ச்சி சமுதாயத்தில் இந்தியா சிறப்பாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |