கொரோனவினால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சீனாவிலிருந்து பரவிய இந்த நோய் தற்போது இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் 3 பேர் இந்நோயினால் இறந்துள்ளனர். 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதை நினைத்து வருந்துவதை விட மேலும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதே சிறந்தது.
கொரோனா பரவாமல் இருக்க செய்ய வேண்டியவை
கொரோனா முதலில் சளி மூலமே பரவுகிறது. எனவே முடிந்தவரை குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. 5 நிமிடத்திற்கு ஒரு முறை கை கால்களை கழுவி கொண்டே இருங்கள்.தனித்தனியாக சோப்பை உபயோகப்படுத்த பழகுங்கள். ஹாண்ட் வாஷ்களை திரவியமாகவே வாங்குங்கள்.
குழந்தைகள் வெளியில் விளையாட செல்வதை சிறிது நாட்களுக்கு தவிர்க்கவும். முக்கியமாக குழந்தைகளை அதிக நேரம் நீரில் விளையாட விடாதீர்கள். குடிக்கும் நீரை நன்கு காய்ச்சி குடியுங்கள். குளிக்கும்போதும் வெந்நீரிலேயே குளிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானதாகும்.
வெளியில் சென்று வந்ததும் கை கால்களை 3 அல்லது 4 முறை கழுவி விட்டு அடுத்த வேலையை செய்யவும். முடிந்தவரை முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்லவும். கூடுமானவரை நண்பர்கள் உறவினர்களுக்கு கை கொடுப்பதை தவிர்க்கவும். யாருக்கேனும் சளி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களிடம் சற்று விலகியே இருங்கள்.
கூடுமானவரை வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். உணவு பழக்கம் மிகவும் முக்கியமானது. கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். வீட்டு உணவுகளை மட்டும் சாப்பிடுவது நல்லது. மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு செல்வதை கொஞ்சம் தவிருங்கள்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |