மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை ஆற்றினார். அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
காங்கிரஸ் கட்சியினர் எந்த அளவுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்க முடியுமோ எதிர்க்கட்டும். ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு பாகிஸ்தான் இல் இருந்து இந்திய வரும் சிறுபான்மையினர் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை ஓயாது என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வரும் இந்து, சீக்கியர், புத்தர்கள், கிறிஸ்தவ அகதிகளுக்கு இந்தியாவில் அனைத்து விதமான உரிமைகளும் கிடைத்த பின்பு தான் நாங்கள் ஓய்வெடுப்போம் என்றும் தெரிவித்தார்.
அயோத்தியில் இன்னும் 4 மாதத்திற்குள் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு
குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்